December 23, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 6

பதிவு ... 7


(Pic : Thanks to wikipedia)


     சரி .. .  வாக்கிய, திருக்கணித முறைகளில் எவற்றை எடுத்துக் கொள்வது என்ற வாதத்தை முன் வைத்தால் 2 உதாரண நிகழ்வுகள் மூலம் திருக்கணித முறைதான் சரியானது என்பதை நாம் காண முடியும்.

     நிகழ்வு 1.  2003 May 7 ம் தேதி காலை 10.41 முதல் மாலை 04.03 வரை புதன், சூரியனைக் கடந்து சென்றது. இது வெறும் கண்களால் பார்க்க முடிந்த நிகழ்வு. இதனைப் பல்வேறு புகைப்படங்களும் தெளிவாகக் காட்டின. இந்த 5 மணி 22 நிமிட நேரத்தில் புதனானது, சூரியனின் மையப்பகுதியை மதியம் 01.22 க்கு கடந்து கொண்டு இருக்க வேண்டும். அதாவது இரண்டும் ஒரே பாகையில் இருக்க வேண்டும். Ephemeris படி சூரியனும், புதனும் பரணி 3 ஆம் பாதத்தில்  உள்ளார்கள். ஆனால் வாக்கிய முறையிலோ சூரியன் அசுவினி 3 லும், புதன் பரணி 1 லும் உள்ளனர்.
அந்த அபூர்வ நிகழ்வை காணுங்கள் (Thanks to youtube)


                                   


      நிகழ்வு 2.  அதேபோல் 08.06.2004 அன்று காலை 10.34 க்கு ஆரம்பித்து மாலை 05.02 வரை சுக்கிரன், சூரியனைக் கடந்து சென்றது. மொத்த நேரம் 06.மணி 28 நிமிடம். இதன் பாதி அளவு அதாவது மதியம் 01.58 க்கு சூரியனுக்கு மத்தியில் சுக்கிரன் இருப்பார். அதாவது ஒரே பாகையில் மிருகசீரிடம் 1 ல். ஆனால் வாக்கிய கணிதப்படி சூரியன் மிருகசீரிடம் 1 லும் சுக்கிரன் மிருகசீரிடம் 4 லும் உள்ளனர். அதாவது 10 பாகை வித்தியாசம் உள்ளது.

இந்த அபூர்வ நிகழ்வையும் காணுங்கள் (Thanks to youtube)




      2 படத் துளிகளைப் பார்த்தீர்கள் . . .

     கணித்து அறியப் பெற்ற திருக்கணித முறையே சரியான முறை என்பது தெளிவாகிறது அல்லவா?

தொடரும். . . .

No comments: