December 20, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 5

பதிவு ... 6


(Pic : Thanks to google)

      மக்களிடமும் ஜோதிடர்களிடமும் நிலவும் இந்தப் பிரச்சனைக்கு அரசாங்கம் ஏதேனும் கூறி உள்ளதா என்று ஆராய்ந்தால்  . . . .
     இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஏறத்தாழ 30 வித பிரதேச நாட்காட்டிகள் உபயோகத்தில் இருந்தன. இவற்றை ஒன்று கூட்டி ஒரே நாட்காட்டியாக்க முடிவு செய்யப்பட்டு 1952 ல் Calender reform committee உருவாக்கப்பட்டது. இந்தக் கமிட்டியின் தலைவராக Prof.Megnad saha  வும், N.C.Lahari  போன்றவர்கள் உறுப்பினர்களாகவும் அதில் இடம் பெற்றிருந்தனர். இந்த கமிட்டி தனது அறிக்கையை 1955 ல் அரசாங்கத்திடம் அளித்தது.
     அந்த அறிக்கையில், சூரிய சித்தாந்தத்தில் உள்ள கணித முறைகள் தற்கால அறிவியல் உலக துல்லிய கணித அமைப்புக்கு ஒத்து வரவில்லை என்றும் சுமார் இரண்டு மணி நேரம் அவை வித்தியாசப் படுவதாகவும் கூறியுள்ளது.
     இதன் தொடர்சியாக 1957 ம் ஆண்டு முதல் இந்திய வானிலை ஆராய்சி இலாகாவினால் கிட்டத்தட்ட 14 மொழிகளில் ராஷ்ட்ரீய பஞ்சாங்கம் பிரசுரிக்கப் பட்டு வருகிறது. பஞ்சாங்க கணிதத்திற்கு நவீன விஞ்ஞான அறிவியல் அடிப்படை யினைக் கொண்டு ஊக்குவிப்பதே குறிக்கோளாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

தொடரும் . . . 

No comments: