December 15, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 1

பதிவு ... 2

வாக்கியம் திருக்கணிதம் ஒரு ஒப்பீடு



   
                        (Pic : Thanks to google) 
   மனிதனுக்குப் பகுத்தறியும் அறிவு தோன்றியதிலிருந்து இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளையும், சம்பவங்களையும் இணைத்து காணக் கூடிய  சகுனம் பார்க்கும் முறையே ஜோதிடத்தின் ஆரம்பம் எனலாம்.
பழங்காலத்தில் அறிவியல் சாத்திரமாகத் தோன்றியது வான சாத்திரமாகும். இந்தியாவின் ஜோதிட வளர்ச்சி என்பது பண்டைய வேத காலம் முதற்கொண்டு தொடங்கியது. இவ் வேதகாலம் என்பது கி.மு.2000 என்று கூறப்படுகிறது.
இக்கால அமைப்பில் ஏற்பட்டது தான் நான்கு வேதங்கள். வேதங்களை உருவாக்கும் போது காலத்தைப் பற்றி அறிய வான சாத்திரத்தை உருவாக்கினார்கள் இதுவே இந்து சமய வேதத்தில் உள்ள ஜோதிட சாத்திரமாகும்.
     இந்த வேதங்களில் உள்ள ஜோதிஷம் என்பது வான சாத்திரத்தைப் பற்றி மட்டும் தான் கூறுகிறதே தவிர தனி மனிதனுடைய வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றியோ அல்லது சாதக சாத்திரம் பற்றியோ குறிப்பிடவில்லை. வேத ஜோதிடத்தில் மட்டுமல்லாமல் கி.மு.900-ல்
உருவாக்கப்பட்ட வேதாங்க ஜோதிடத்திலும் சமயச் சடங்குகள் நிறைவேறுவதற்குரிய காலங்களை கண்டு பிடிப்பதற்குத் தான் வானசாத்திரம் பயன்படுத்தப்பட்டது
     வான சாத்திரத்தில் சூரியன் முதலான ஏழு கோள்களையும் வெறும் கண்களால் கண்டு பிடித்து அவற்றிற்கு பெயர் சூட்டினர். நட்சத்திரக் கூட்டங்களை அடையாளப்படுத்தி பன்னிரு ராசி மண்டலங்களாக உருவாக்கப்பட்டது

தொடரும் . . .



என்ன எழுதப் போகிறேன் ?

பதிவு  ... 1


(Pic : Thanks to google)
வணக்கம்

Astromaster 05 வலைத்தளத்திற்கு வரவேற்கிறேன். இங்கு என்ன எழுதப் போகிறேன். 
எதுவானாலும் அது சுவாரஸ்யமான் பதிவாகத்தான்  நிச்சயம் இருக்கும். அதுவும் 90 % ஜோதிடம் பற்றியதாகத்தான்  இருக்கும்.

முதலில் சில கேள்விகள் . . . 

1.ஜோதிடம் உண்மையானதா ?

2.ஜோதிடம் அறிவியல் ரீதியானதா ?

3.ஜோதிடம் தோன்றியது எப்போது ?

4.ஜோதிடத்தினால் 100 % சரியான பலன்களை சொல்ல முடியுமா ?

5.ஜோதிட பரிகாரங்கள் பலன் அளிக்குமா ?

நிறைய விஷயங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முகங்களைக் காட்டி வருவது ஜோதிடத்தின் தன்மை அப்படி யென்றால் ஜோதிடம் குழப்பமானதா ? 
இல்லை ...
பலரும் அதில் நிறைய விஷயங்களை சேர்த்து குழப்பமானதாக மாற்றி   விட்டார்கள். ஜோதிடம் என்றைக்கும் தெளிந்த தன்மையுடன் தெளிவான வழிகாட்டியாகத்தான் இருக்கிறது.

நிறைய பேசப்போகிறோம் உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்