பதிவு - 14
நதி சார்ந்த
இடங்களில் தான்
கலாசாரங்கள் வளர்ந்து
வந்தன என்று
பார்த்தோம். சுமேரிய கலாசாரமானது
கி.மு.5000
முதல் கி.மு.3000 வரை இருந்துள்ளது. இதன் பின்னர் பாபிலோனிய
பேரரசால் இது
முடிவுக்கு வந்தது.
மெசபதொமியா
என்றால் கிரேக்க மொழியில் இரண்டு நதிகளுக்கு இடையில் உள்ள மேட்டு நிலப்பகுதி
என்பது பொருளாகும். இன்றைய ஈராக் நாட்டில்
உள்ள புகழ் பெற்ற யுப்ரடீஸ் டைகிரிஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியே
மெசபதோமியாவாகும். இதற்கு கீழ்ப்புறத்தில்
தெற்கு பகுதியில் இருந்த நாடு பாபிலோனியாவாகும்.
உலக அற்புதங்களில் ஒன்றான தொங்கும் தோட்டம் இருந்த நாடு. பாபிலோன் என்றால் கடவுளின் நுழைவு வாயில் என்று
பொருள்படுகிறது. இவர்களது ஆட்சி காலத்தில்
கி.மு.18 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.16 ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலங்களில்
விண்வெளி ஆய்வுகள் நடத்தப்பட்டு ‘எனுமா அனுஎன்லில்’
என்ற முதல் ஜோதிட நூல் உருவாக்கப்பட்டது.
நதிகள் பற்றி எழுதும் போது ஏ.ஆர்.ரஹுமான்
இசையில் ரிதம் என்ற படத்தில் அர்ஜூன் பாடும் (குரல் உன்னிமேனன்) ‘நதியே நதியே
காதல் நதியே நீயும் பெண்தானே’ என்ற இனிமையான பாடல் நினைவுக்கு
வந்தது. அதை காணொளியில் இங்கு காணலாமா..
பயணம் தொடரும்......
No comments:
Post a Comment