Important pages - முக்கியமான பக்கங்கள்

December 18, 2012

பஞ்சாங்கம் எது சரி ?- 4

பதிவு ... 5



(Pic: Thanks to  wikipedia)

இது இவ்வாறிருக்க . . .
     தற்போது ஜோதிட உலகில் பலரும் திருக்கணித முறையைப் பின்பற்றி வரும் நிலையில், பல நூற்றாண்டுகளாக வாக்கிய முறையைப் பின்பற்றிப் பலன் கூறி வந்தது தவறா என்ற கேள்வியும் இரண்டு முறைகளிலும் கணித்துப் பார்த்தால் சில சாதகங்களில் நட்சத்திர சாரங்களில் மாற்றம் வருகிறதே என்ற கேள்வியும் வராமல் இல்லை.
     அது மட்டுமின்றி ஜோதிடர்கள் பலன் கூறுவதற்குப் பராசரர் முறையை பின்பற்றி வரும் நிலையில், பராசரர் இந்த இருவேறு கணிதங்களுக்கும் இருவேறு பலன்களையா கூறினார்?
     ஆரம்ப காலத்தில் வானசாத்திரமும், ஜோதிட சாத்திரமும் ஒன்று கலந்தே இருந்தன. ஆனால், வான சாத்திரம் அறிவியல் வண்ணத்தைப் பூசிக்கொண்டு அஸ்ட்ரானமி (Astronomy) எனும்  விஞ்ஞானமாகி வளர்ந்து நிற்கிறது. ஜோதிடம் மட்டும், சமயம் என்னும் அமைப்பில் இணைந்து முன்னேற்றம் இன்றி எந்த கணிதம் சரி என்ற நிலையில் போராடி வருகிறது.    
     திருக்கோவில்களில் வாக்கியப் பஞ்சாங்க முறைகளிலேயே விரதாதி அனுஷ்டானங்களும் பூஜை முறைகளும் செய்து வரும் நிலையில், மக்களும் பெரும்பாலும் அதனையே பின் பற்றி வருகிறார்கள். சில ஜோதிடர்களும் எந்த கணிதத்தில் ஜாதகம் கணிக்கப்பட்டிருக்கிறது என்று கூடப் பார்க்காமல் ராசிகளையும் பெயர்சிகளையும் கொண்டே பலன்கள் கூறி வருவது வருந்தத்தக்கது.

தொடரும் . . .

No comments:

Post a Comment