Important pages - முக்கியமான பக்கங்கள்

December 15, 2012

பஞ்சாங்கம் எது சரி ? - 1

பதிவு ... 2

வாக்கியம் திருக்கணிதம் ஒரு ஒப்பீடு



   
                        (Pic : Thanks to google) 
   மனிதனுக்குப் பகுத்தறியும் அறிவு தோன்றியதிலிருந்து இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளையும், சம்பவங்களையும் இணைத்து காணக் கூடிய  சகுனம் பார்க்கும் முறையே ஜோதிடத்தின் ஆரம்பம் எனலாம்.
பழங்காலத்தில் அறிவியல் சாத்திரமாகத் தோன்றியது வான சாத்திரமாகும். இந்தியாவின் ஜோதிட வளர்ச்சி என்பது பண்டைய வேத காலம் முதற்கொண்டு தொடங்கியது. இவ் வேதகாலம் என்பது கி.மு.2000 என்று கூறப்படுகிறது.
இக்கால அமைப்பில் ஏற்பட்டது தான் நான்கு வேதங்கள். வேதங்களை உருவாக்கும் போது காலத்தைப் பற்றி அறிய வான சாத்திரத்தை உருவாக்கினார்கள் இதுவே இந்து சமய வேதத்தில் உள்ள ஜோதிட சாத்திரமாகும்.
     இந்த வேதங்களில் உள்ள ஜோதிஷம் என்பது வான சாத்திரத்தைப் பற்றி மட்டும் தான் கூறுகிறதே தவிர தனி மனிதனுடைய வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றியோ அல்லது சாதக சாத்திரம் பற்றியோ குறிப்பிடவில்லை. வேத ஜோதிடத்தில் மட்டுமல்லாமல் கி.மு.900-ல்
உருவாக்கப்பட்ட வேதாங்க ஜோதிடத்திலும் சமயச் சடங்குகள் நிறைவேறுவதற்குரிய காலங்களை கண்டு பிடிப்பதற்குத் தான் வானசாத்திரம் பயன்படுத்தப்பட்டது
     வான சாத்திரத்தில் சூரியன் முதலான ஏழு கோள்களையும் வெறும் கண்களால் கண்டு பிடித்து அவற்றிற்கு பெயர் சூட்டினர். நட்சத்திரக் கூட்டங்களை அடையாளப்படுத்தி பன்னிரு ராசி மண்டலங்களாக உருவாக்கப்பட்டது

தொடரும் . . .



2 comments: