பகுதி - 15
(நன்றி : விக்கிபீடியா)
பாபிலோனியாவில் தொடர்ந்து வான
சாத்திர ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் கண்டு
பிடித்த ஜோதிடச்சாத்திரம் நாட்டில் ஏற்படும்
தீங்குகளை எடுத்துக்கூறவும், மன்னருக்கு எதிர்காலத்தில் ஏற்படும் வெற்றி
தோல்வி குறித்து
அறிவதற்காகவுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. தனிமனித முன்னேற்றத்திற்காக தற்போது பார்க்கும்
தனிமனித ஜாதக
முறைகளை அவர்கள்
பயன்படுத்தவில்லை.
சூரிய சந்திர
கிரகண கணிதங்களைக் கொண்டு
பன்னிரு இராசிச்
சக்கரத்தை அமைத்தவர்கள் பாபிலோனியர்களே. வான மண்டலமானது
மொத்தம் 360 பாகைகளைக் கொண்டது. அதனை எளிதாகக்
கணிப்பதற்காக சதுரமாக
வரைந்து 12 கட்டங்களாகப் பிரித்து
ஒரு இராசிக்கட்டத்திற்கு 30 பாகை என்று
பிரித்தது இவர்களின்
காலத்தில்தான்.
வான சாத்திர ஆய்வுகளில் ஆழ்ந்த அறிவு பெற்ற பாபிலோனியர்கள் சூரியன் மற்றும்
சந்திரனைத் தவிர
மீதமுள்ள 5 கோள்களையும் கண்டுபிடித்தார்கள். அவைகளின் பெயர்களைப்
பாருங்கள் :
சூரியன்
= சமாஷ்
சந்திரன் = சின்
செவ்வாய் = நெர்கல்
புதன் = நாபு
குரு = மார்துக்
சுக்கிரன் =
இஷ்தர்
சனி =
நினிப்
பாபிலோனியர்கள் தெய்வீக
வழிபாட்டில் சிறந்து
விளங்கியதால் தாங்கள்
கண்டு பிடித்த
கோள்களுக்கும் தாங்கள்
வழிபடும் கடவுள்களின்
பெயர்களையே சூட்டி
அவற்றை வணங்கி
வந்தனர்.
இன்றைக்கு எல்லா
தொலைக்காட்சிகளிலும் ராசிபலன்,
பெயர்சிபலன் என்று
கூறி ஒவ்வொரு
கோவிலாக எல்லா
ஜோதிடரும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால்
கிரக வழிபாடு
எப்போது முதல் இருந்து வந்திருக்கிறது
பார்தீர்களா?
இன்றைக்கு ஜாதகம் பார்க்கும் எல்லோருமே தங்களின் துயரங்கள் தீர ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லும்படி ஜோதிடரிடம் கேட்காமல் இருப்பதில்லை.
ஒரு நாள்
ஒரு நபர்
சாதகம் பார்க்க வந்திருந்தார். ஜாதகம் பார்த்து
முடித்த பின்
“சார் ஒரு
சின்ன விஷயம்”
என்றார்.
“என்ன
சொல்லுங்க” என்றேன்.
“என்
ப்ரெண்டு ஒரு
சந்தேகம் கேட்டுட்டு வரச்சொன்னார்”
“என்ன
கேளுங்க”
“அவர்
பையன் நல்லா
படிச்சி பெரிய
ஆளா வரணுமாம்
பொதுவா இந்த
மாதிரி பரிகாரத்துக்கு நீங்க எந்த
கோவிலுக்கு அனுப்பி
வைப்பீங்கன்னு கேட்கச் சொன்னார்.”
“அப்படியா.....சரி ...அவர் பையன் என்ன படிச்சிகிட்டு இருக்கார்..”
“படிக்கலைங்க…. ரெண்டு வயசு
ஆகுது”
“அவர
மொதல்ல கொழந்தய
ஸ்கூலுக்கு அனுப்பி
வைக்கச்சொல்லுங்க” என்றேன்.
பயணம்
தொடரும்……