January 9, 2018

ஜோதிடத்தின் பாதை – 6

பகுதி - 15

(நன்றி : விக்கிபீடியா)

     பாபிலோனியாவில் தொடர்ந்து வான சாத்திர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுஇவர்கள் கண்டு பிடித்த ஜோதிடச்சாத்திரம் நாட்டில் ஏற்படும் தீங்குகளை எடுத்துக்கூறவும், மன்னருக்கு எதிர்காலத்தில் ஏற்படும் வெற்றி தோல்வி குறித்து அறிவதற்காகவுமே பயன்படுத்தப்பட்டு வந்ததுதனிமனித முன்னேற்றத்திற்காக தற்போது பார்க்கும்  தனிமனித ஜாதக முறைகளை அவர்கள் பயன்படுத்தவில்லை
     சூரிய சந்திர கிரகண கணிதங்களைக் கொண்டு பன்னிரு இராசிச் சக்கரத்தை அமைத்தவர்கள் பாபிலோனியர்களேவான மண்டலமானது மொத்தம் 360 பாகைகளைக் கொண்டதுஅதனை எளிதாகக் கணிப்பதற்காக சதுரமாக வரைந்து 12 கட்டங்களாகப் பிரித்து ஒரு இராசிக்கட்டத்திற்கு 30 பாகை என்று பிரித்தது இவர்களின் காலத்தில்தான்.
      வான சாத்திர ஆய்வுகளில் ஆழ்ந்த அறிவு பெற்ற பாபிலோனியர்கள்   சூரியன் மற்றும் சந்திரனைத் தவிர மீதமுள்ள 5 கோள்களையும் கண்டுபிடித்தார்கள்.    அவைகளின் பெயர்களைப் பாருங்கள் :
                                        சூரியன்            = சமாஷ்
                    சந்திரன்           = சின்
                    செவ்வாய்       = நெர்கல்
                    புதன்                  = நாபு
                    குரு                     = மார்துக்
                    சுக்கிரன்           = இஷ்தர்
                    சனி                     = நினிப்

     பாபிலோனியர்கள் தெய்வீக வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் தாங்கள் கண்டு பிடித்த கோள்களுக்கும் தாங்கள் வழிபடும் கடவுள்களின் பெயர்களையே சூட்டி அவற்றை வணங்கி வந்தனர்.
     இன்றைக்கு எல்லா தொலைக்காட்சிகளிலும் ராசிபலன், பெயர்சிபலன் என்று கூறி ஒவ்வொரு கோவிலாக எல்லா ஜோதிடரும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் கிரக வழிபாடு எப்போது முதல்  இருந்து வந்திருக்கிறது பார்தீர்களா?
     இன்றைக்கு ஜாதகம் பார்க்கும் எல்லோருமே தங்களின் துயரங்கள் தீர ஏதாவது பரிகாரம் இருந்தால்  சொல்லும்படி ஜோதிடரிடம் கேட்காமல் இருப்பதில்லை.
     ஒரு நாள் ஒரு நபர் சாதகம் பார்க்க வந்திருந்தார்ஜாதகம் பார்த்து முடித்த பின்சார் ஒரு சின்ன விஷயம் என்றார்.
என்ன சொல்லுங்கஎன்றேன்.
என் ப்ரெண்டு ஒரு சந்தேகம் கேட்டுட்டு வரச்சொன்னார்
என்ன கேளுங்க
அவர் பையன் நல்லா படிச்சி பெரிய ஆளா வரணுமாம்  பொதுவா இந்த மாதிரி பரிகாரத்துக்கு நீங்க எந்த கோவிலுக்கு அனுப்பி வைப்பீங்கன்னு கேட்கச் சொன்னார்.
அப்படியா.....சரி ...அவர் பையன் என்ன  படிச்சிகிட்டு இருக்கார்..
படிக்கலைங்க…. ரெண்டு வயசு ஆகுது
அவர மொதல்ல கொழந்தய ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கச்சொல்லுங்க என்றேன்.


பயணம் தொடரும்……


January 2, 2018

ஜோதிடத்தின் பாதை - 5

பதிவு - 14 

     நதி சார்ந்த இடங்களில் தான் கலாசாரங்கள் வளர்ந்து வந்தன என்று பார்த்தோம்சுமேரிய கலாசாரமானது கி.மு.5000 முதல் கி.மு.3000 வரை இருந்துள்ளதுஇதன் பின்னர் பாபிலோனிய பேரரசால் இது முடிவுக்கு வந்தது
     மெசபதொமியா என்றால் கிரேக்க மொழியில் இரண்டு நதிகளுக்கு இடையில் உள்ள மேட்டு நிலப்பகுதி என்பது பொருளாகும்.  இன்றைய ஈராக் நாட்டில் உள்ள புகழ் பெற்ற யுப்ரடீஸ் டைகிரிஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியே மெசபதோமியாவாகும்.  இதற்கு கீழ்ப்புறத்தில் தெற்கு பகுதியில் இருந்த நாடு பாபிலோனியாவாகும்.  உலக அற்புதங்களில் ஒன்றான தொங்கும் தோட்டம் இருந்த நாடு.  பாபிலோன் என்றால் கடவுளின் நுழைவு வாயில் என்று பொருள்படுகிறது.  இவர்களது ஆட்சி காலத்தில் கி.மு.18 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.16 ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலங்களில் விண்வெளி ஆய்வுகள் நடத்தப்பட்டு ‘எனுமா அனுஎன்லில் என்ற முதல் ஜோதிட நூல் உருவாக்கப்பட்டது. 
     நதிகள் பற்றி எழுதும் போது ஏ.ஆர்.ரஹுமான் இசையில் ரிதம் என்ற படத்தில் அர்ஜூன் பாடும் (குரல் உன்னிமேனன்) ‘நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே என்ற இனிமையான பாடல் நினைவுக்கு வந்தது.  அதை காணொளியில் இங்கு காணலாமா..




பயணம் தொடரும்......





January 1, 2018

2018 புது வருட வாழ்த்து


இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்துக்கள்

2018


இந்த புதிய வருடம் அனைவருக்கும் நன்மையை அளிக்கட்டும்  


February 8, 2013

ஜோதிடத்தின் பாதை - 4

பதிவு – 13




     வேதத்தின் அங்கம் என்று ஜோதிடத்தைப் பற்றி கூறும் அதே சமயம், அதனுடைய மற்ற அங்கங்கள் என்ன என்றும் தெரிந்து கொள்ளுவோம்.
வேதங்களுடைய அங்கங்கள் மொத்தம் 6 ஆகும்.

1.சிட்சை : (Phonetics) எழுத்து இலக்கணம், மற்றும் மந்திர உச்சாடணை முறைகளைப் பற்றி கூறுவது.

2.வ்யாகரணம் : (Grammer) மந்திரச் சொற்களின் இலக்கணம் பற்றிக் கூறுவது.

3.சந்தஸ் : (Prosody) செய்யுள் இலக்கணம்.

4.நிருக்தம் : (Etymology) மந்திரங்களின் வேர் போன்ற மூலச் சொற்களைப் பற்றிய வரலாறு.

5.ஜோதிஷம் : (Astronomy) (இது  நம்ம மேட்டரு.) வான சாத்திரம் பற்றியும், மந்திர உச்சாடனை செய்யும் காலம் பற்றியும் எடுத்துக் கூறுவது.

6.கல்பம்: (Rituals) சமயச் சடங்கு முறைகள் பற்றியும், சடங்கு மந்திரங்கள் பற்றியும் விளக்குவது.

     வேதத்தில் உள்ள ஜோதிடக் க்ருத்துக்கள் வேதாங்க ஜோதிடத்திலும் பிரதிபலிக்கின்றன.
     ருக், யஜூர் வேத கருத்துக்கள் யாஜூஸ்ரீ ஜோதிடம் எனவும், அதர்வண வேத கருத்துக்கள் அதர்வண ஜோதிஷம் என்றும் அழைக்கப்படுகின்றன.
     வேதங்களை ஏற்படுத்தும் போது, இப்போது எழுதி வைப்பது மாதிரி எழுதவெல்லாம் முடியாது. மனனம் தான். குருகுலத்தில் காலை முதல் மாலை வரை அதே வேலைதான்.
     இந்த இந்து சமய வேதத்தில் ஜோதிஷம் என்பது வான சாத்திரத்தைப் (Astronomy) பற்றி மட்டும் தான் கூறி வந்துள்ளது. தனி மனித வாழ்வு அல்லது சாதக சாத்திரம் பற்றியெல்லாம் (Astrology) சொல்லப்படவில்லை.
     சென்ற பதிவில் வேத காலம் என்பது பற்றி கூறியிருந்தேன்.  கி.மு 4000 மாக இருக்கலாம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் பாலகங்காதரத் திலகரை அறிவீர்களா ? ஆமாம் ஐயா, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர் தான்.  அவர் ஒரு புத்தகத்தில் வேதகால பூர்வ யுகம் என்பது கி.மு.10000 க்கு முன் என கூறி இருக்கிறார்.
     இன்னொரு ஆராய்ச்சியாளர் K.N.Rao  சொல்றத கேளுங்க வேத யுகம் என்பது கி.மு.23750 என்கிறார்.
     இதையெல்லாம் படித்துப் பார்த்தால் வரலாறுக்கு ஏது சார் வரையறை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நம்ம புராணங்கள் கட்டுக் கதைகள் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் இந்த காலக் கணக்குகள் சில வழிமுறைகள் இதையெல்லாம் காணும் போது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை தான்.
     யுகக் கணக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
     ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 மானிட ஆண்டுகள்
     இதை . . .
     கிருத யுகம்     = 17,28,000  ஆண்டுகள்
     திரேதா யுகம்.   = 12,96,000  ஆண்டுகள்    
     துவாபர யுகம்   = 08,64,000  ஆண்டுகள்
     கலி யுகம்.      = 04,32,000  ஆண்டுகள் என பிரித்து உள்ளார்கள்.
     கலியுகம் x 2 = துவாபர யுகம்
     கலியுகம் x 3 = திரேதா யுகம்
     கலியுகம் x 4 = கிருத யுகம்

     மேலே சொன்ன அந்த 43,20,000 வருஷத்தை 1 சதுர் யுகம்னு சொல்லலாம்.

     இப்படியே 72 சதுர்யுகம் சேர்ந்தால் ஒரு மன்வந்தரம்.

     14 மன்வந்தரம் சேர்ந்தது ஒரு கல்ப காலம். இது தான் பிரம்மாவுக்கு ஒரு பகலாம். இதே போல் இரவும்.
     அதாவது 28 மன்வந்தரம் = பிரம்மாவுக்கு 1 நாள்.
     இப்படியே கணக்கு போட்டுட்டு வாங்க பிரம்மாவுக்கு இப்ப 51 வயசு. அவரோட மொத்த ஆயுள் 100.

     இப்போ நம இருக்கறது 27 வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வ்ந்தரத்தில்.

     என்ன கணக்குப் போட்டு பாத்திட்டீங்களா ?
     . . . . .
     என்னது...? நான் போட்டு சொல்லணுமா..... ?

     வடிவேலு பாஷையில் சொல்லட்டுமா . . .
     ஆணியே புடுங்க வேணாம் ஆள வுடுங்க சாமி.
     ஒரு கதை ஞாபகத்துக்கு வருது.
     இப்படித்தான் பேராசை பிடித்த ஒருத்தன் பிரம்மா கிட்ட வரம் கேக்கறதுக்காக தவம் பண்ணிக்கிட்டு இருந்தான். பிரம்மாவும் அவன் எதிர்ல வந்தார்.
     என்னப்பா வரம் வேணும்” அப்படின்னு கேட்டார்.
     சாமி உங்களுக்கு பலகோடி வருஷம்லாம் ஒரு நாள் மாதிரியாமே... அப்படியா சாமி"
     ஆமாம்பா... உனக்கு என்ன வேணும்னு கேளு
     அப்ப பலகோடி ரூபால்லாம் ஒரு ரூபா மாதிரிதான் இல்ல சாமி
     பிரம்மாவுக்கு பொறுமையே போயிடுச்சி.
     ஆமாம்பா... உனக்கு என்ன வரம் வேணும்னு கேளு
     உங்க கிட்ட என்ன சாமி பெரிசா கேக்கப் போறேன். உங்க கணக்குபடி ஒரு ரூபா கொடுங்க போதும்
     பிரம்மா பார்த்தார். 
     அவன பாத்து சிரிச்சிக்கிட்டே 
     சரிப்பா . . .  தரேன். ஆனா ஒரு  நாள் பொறு அப்படின்னார்.


பயணம் தொடரும் . . .
     

February 3, 2013

ஜோதிடத்தின் பாதை - 3

பதிவு – 12





     இவ்வுலகம் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து கொண்டே தான் வருகிறது.  அந்த வளர்ச்சிகளைப் பார்த்தால் அவை அனைத்தும் நீர்
நிலைகள் மற்றும் நதிகளைச் சார்ந்து உள்ள இடங்களாகத் தான் வளர்ந்து வந்திருக்கும்.
     நாகரிகம் ஆரம்பித்தது அப்படித்தான். யூப்ரடிஸ் டைகிரிஸ் (மெசபடோமியா), கங்கை நதி (இந்தியா), வோல்கா நதி (கிரேக்கம்,ரோம்),  நைல் நதி (எகிப்து), மஞ்சள் நதி (சைனா) என நதி சார்ந்த இடங்களில் உள்ள நாடுகள் நாகரீகத்தை வளர்த்துக் கொண்டன.
     முதன்முதலில் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வினை சுமேரிய, மெசபடோமிய மக்கள் தான் தோற்றுவித்தார்கள். ஏறத்தாழ கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆய்வை தொடங்கி உள்ளார்கள்.  வானவியல், ஜோதிட சாத்திரத்தின் முன்னோடிகள் என்று இவர்களை அழைக்கலாம்.
     சூரிய சந்திரர்களை கடவுளாக்கி விண் வெளியில் காணும் ஒளி மாற்றங்களைக் கொண்டு வான சாத்திர ஆய்வைச் செய்து வ்ந்தார்கள். 
     அவர்கள் கண்டுபிடித்த கடைப்பிடித்த சோதிட முறைகளை களிமண்ணால் பொறித்து வைத்தார்கள். அதைப் பார்த்தீர்கள் என்றால் எழுத்துக்கள் என்பதை விட வடிவங்கள் என்று சொல்லலாம். அந்த எழுத்து வடிவ முறைக்கு க்யூனிஃபார்ம் (Cuneiform) என்று பெயர்.
     கீழே உள்ள படங்களைப் பாருங்கள்.




(படங்கள் : நன்றி  wiki)



    இந்த எழுத்துக்களை பார்க்கும் போது ஒன்று தோன்றியது. என்னிடம் ஜாதக பலன் கேட்க  வருகின்ற அன்பர்கள் கொண்டு வரும் அந்த ஜாதக நோட்டில் உள்ள விவரங்களைப் பார்க்கும் போது கண் வலிதான் மிஞ்சும். ஏனெனில் அதில் உள்ள எழுத்துக்கள் புரியவே புரியாது. அந்த எழுத்துக்களை விட இந்த க்யூனிஃபார்ம் எழுத்துக்கள் எவ்வளவோ தேவலாம்.
     இந்தியாவில் இந்த வானவியல் சாத்திரமானது வேதகாலம் தொட்டு ஆரம்பித்தது.  வேதகாலம் என்பதில் கி.மு.4000, கி.மு.2000 என்று கால வேறுபாடுகள் இருந்தாலும், இந்திய ஐரோப்பியர்கள் எனப்படும் ஆரியர்கள் உருவாக்கியது தான் வேதங்கள் என வரலாறு கூறுகிறது.
     விக்கி”யிடம்  மேற்கொண்டு விவரங்களை கேட்டுக் கொள்ளுங்கள். பழைய வரலாற்றை கிளற ஆரம்பித்தால் நமக்கு குழப்பமே வந்து விடும். 
     நமது இந்தியாவில் தொன்மையான இந்து   சமயத்தில் இருந்து தான் இந்திய ஜோதிட சாத்திரம் உருவாகிறது. அடிப்படையான நான்கு  வேதங்களிலும்  ஜோதிட சாத்திரம் இருந்துள்ளது.  இதில் சாம வேதத்தின் ஜோதிட சாத்திரம் கிடைக்கப் பெறவில்லை.  ருக், யஜூர் மற்றும் அதர்வண வேதங்களில் உள்ள ஜோதிட சாத்திரமே இந்திய ஜோதிட வரலாற்றின் தொடக்கம் எனலாம்.  
     இன்றளவும் வேதத்தின் ஒரு அங்கமாகத்தான் ஜோதிஷம் கருதப்பட்டு வருகிறது. 
    

பயணம் தொடரும் . . . . 

February 1, 2013

ஜோதிடத்தின் பாதை – 2

பதிவு - 11

(நன்றி : மலாக்கா முத்துகிருஷ்ணன்)

          சகுனத்தைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் சுவாரஸ்யமான பல விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது.
     பழங்காலத்தில் மனிதர்கள் தங்களின் அடுத்தடுத்த செயல்களுக்கெல்லாம் சகுனங்களையே அடிப்படையாக கொண்டிருந்தார்கள்.
     சகுனம் என்கிற வார்த்தை இப்போது ஏளனமாக சொல்லக்கூடிய அளவில் தான் இருக்கிறது. அதுவும் பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் கேலி செய்வது ஃபாஷன் மாதிரி ஆகி விட்டது. மூட நம்பிக்கைக்கும் அடிப்படை அனுபவத்திற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது.
     ஒவ்வொரு சகுனத்திற்கும் அடிப்படைச் செய்திகள் இருக்கின்றன. ஒரு செயலைப்பார்த்து மற்றொன்றைத் தீர்மானிப்பது என்பது அறிவியலுக்கு ஒப்பானது அல்லவா?
     உலகத்தில், எதையும் பார்க்காமல் வருங்காலத்தைப் பற்றி கற்பனையில் முடிவு செய்யும் பல கலைகள் உள்ளன.  அவற்றிற்கிடையே தாங்கள் கண்ட செயல்களின் அடிப்படையில் திரும்பவும் அந்தச் செயல் நடைபெறுமானால் அவற்றின் முடிவு இப்படித்தான் இருக்கும் என அனுபவ ரீதியாக சொல்வது எப்படி கேலிக்கு உரியதாக இருக்கும்.
     ஜோதிடத்தில், ப்ரசன்ன ஜோதிடம் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு சகுனம் மட்டுமல்லாமல் நிமித்தம் என்ற ஒன்றையும் பார்த்து ஆராய்ந்தாலே நமக்கு சரியான விடை கிடைக்கும். சகுனத்திற்கும், நிமித்தத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு செயல் ஆரம்பிப்பதற்கு முன்னால், அல்லது செயலைச் செய்ய போகும் போது நாம் பார்க்கும் விஷயம் கேட்கும் விஷயங்கள் சகுனம் என்று சொல்லலாம்.  ஒரு செயல் நடந்து கொண்டு இருக்கும் போது தானாக ஒரு விஷயம் நடந்தால் அது நிமித்தம்.
     காலம் நமக்கு சில குறிப்புகளை தந்து கொண்டே இருக்கிறது. அதை சரியான படி புரிந்து கொண்டால் போதும் பல பிரச்சனைகள் தானாக சரியாகும், நாம் தேடும் விடையும் கிடைக்கும்.
      ப்ரசன்ன ஜோதிடம் பற்றி எழுதும் போது அதைப்பற்றிய தகவல்களைக் கூறுகிறேன்.
     எனவே, சகுனச் சாத்திரம் என்பது இயற்கையைப் பார்த்து அதன் போக்கில் அடுத்து என்ன நடக்கும் என ஏற்கனவே கண்ட அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் ஒரு கலை எனலாம்.
     பிருகத் சம்ஹிதை என்னும் பழைய நூல் ஒன்றில் அதன் 86 ஆவது இயல் முதல் 96 ஆவது இயல் வரை உள்ள 11 இயல்களில் சகுனங்களின் அடிப்படையில் அறியக் கூடிய பலன்கள் பற்றி எழுதப் பட்டுள்ளது.
     .நண்பர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இதைப் படித்து விட்டு, செயற்கையாக சில சகுனங்களை ஏற்படுத்திக் கொண்டு ஆஹா நமக்கு சக்ஸஸ் தான் என்று எண்ண வேண்டாம்.  ஸாரி. . .  அதற்கெல்லாம் எந்தப் பலனும் கிடைக்காது.
     இப்படித்தான் நண்பர் ஒருத்தர் வீட்டிற்கு வந்திருந்தார்.
      ஏம்ப்பா உள்ளங்கை அரிச்சா காசு வரும்னு சொல்றாங்களே அது உண்மையா என்றார்.
     பொதுவா சொல்றதுண்டு. கால் அரிச்சா பிரயாணம் இருக்குன்னு சொல்வாங்க, சாப்பிடற தட்டு நகர்ந்தா அடுத்த வேள வேற இடத்துல சாப்பிடப் போறொம்னு சொல்வாங்க அது மாதிரிதான் இதுவும். ஏன் கேக்குற
    இல்லப்பா... ரெண்டு நாளா கை நம நமங்குது நமக்கு யார் காசு தருவாங்கன்னு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்
    இது காசு வர்ற நமச்சல் இல்ல காசு செலவழிக்கற  நமச்சல். மொதல்ல நல்ல ஸ்கின் டாக்டரப் போய் பாரு என்று கூறினேன்.




பயணம் தொடரும்……


January 31, 2013

ஜோதிடத்தின் பாதை - 1

பதிவு - 10





     எந்த ஒரு கலைக்கும் வரலாறு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

     வருங்காலத்திற்கு ஒளி விளக்காய் திகழ்ந்து வழி காட்டும் அறிவியல் கலை இந்த ஜோதிடம் எனக் கூறலாம்.

     இதனை அறிந்து தெளிய நமது முன்னோர்களும், ஞானிகளும், சித்தர்களும் நமக்கு அளித்த மிக அரிய பொக்கிஷம் இச் ஜோதிடக்கலை.

     இதன் ஆரம்பத்தை சற்று அறியக் காண்போம்.

     படிமுறை வளர்ச்சியின் அடிப்படையில் மானுடர்கள் எல்லாவற்றையும் ஆராயத் தலைப்பட்டனர்.  தங்களுக்கு ஏற்படும் பயத்தின் காரணமாக அதற்கு விடை காண முற்பட்டனர். இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தங்களின் தற்காப்பு நடவடிக்கை எந்த வித பயனையும் தராத போது, அந்த இயற்கை இடர்களையே வேண்டிக் கொண்டால் ஓரளவு நல்ல பயன்கள் ஏற்படலாம் என்று நம்பினர்.  அதன் விளைவாக இயற்கையை, வழிபடும் கடவுளாகவே அமைத்துக் கொண்டார்கள்.

     அது மட்டுமன்றி இந்த இயற்கைச் சீற்றங்கள் எப்போது ஏற்படும் என அறிய ஆவலாக இருந்தனர்.  அதனால் மழைச் சகுனம், பறவை சகுனம் என்பதோடு விண்ணில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு அதனையும் சகுனமாக்கி கண்களுக்குப் புலப்படும் சூரிய சந்திரனை ஆய்வு செய்ய முற்பட்ட போது வானவியல் ஜோதிடம் உருவெடுத்தது.

     கிரகண காலங்களில் ஏற்படும் மாற்றங்களையும், பறவைகளின், விலங்குகளின் கூச்சல்களையும் கண்டு அந்த காலம் தீயது என முடிவெடுத்தனர்.
     மின்னிக் கண் சிமிட்டும் ஒளியினைத் தரக்கூடிய வற்றை நட்சத்திரங்கள் என்றும் கண் சிமிட்டாத தன்மை யுடையவற்றை கோள்கள் என்றும் வரையறுத்தனர்.

பயணம் தொடரும் . . . .